ரூ.18¾ கோடியில் கட்டப்பட்டுள்ள 224 அடுக்குமாடி குடியிருப்புகள்


ரூ.18¾ கோடியில் கட்டப்பட்டுள்ள  224 அடுக்குமாடி குடியிருப்புகள்
x

ரூ.18¾ கோடியில் கட்டப்பட்டுள்ள 224 அடுக்குமாடி குடியிருப்புகளின் வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை சப்-கலெக்டர் வழங்கினார்

திருப்பூர்

அனுப்பர்பாளையம், டிச.8-

ரூ.18¾ கோடியில் கட்டப்பட்டுள்ள 224 அடுக்குமாடி குடியிருப்புகளின் வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை சப்-கலெக்டர் வழங்கினார்

திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட பூண்டிநகர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.18 கோடியே 80 லட்சத்தில் 224 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். அதே நேரம் இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கலந்து கொண்டு, அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, பயனாளிகளுக்கு வீடுகளுக்கான ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் குமார், கவுன்சிலர் கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். இதில் துணைத்தலைவர் ராஜேஸ்வரி, கவுன்சிலர்கள் காயத்ரி, ராஜன், யுவராஜ், முருகசாமி, செல்வராஜ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர். முன்னதாக அடுக்குமாடி குடியிருப்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளை சப்-கலெக்டர் ஆய்வு செய்தார்.

மேலும் பயனாளிகளிடம் அங்குள்ள வசதிகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார். அப்போது அடுக்குமாடி குடியிருப்புக்கு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் தொடர்பான தகவல்கள் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணனிடம் வழங்கப்பட்டது.


Related Tags :
Next Story