சைக்கிள் மீது பஸ் மோதல்; பெண் பலி


சைக்கிள் மீது பஸ் மோதல்; பெண் பலி
x
தினத்தந்தி 1 Jan 2023 6:45 PM GMT (Updated: 1 Jan 2023 6:46 PM GMT)

சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார்.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் அடுத்த விட்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 67). இவர் தனது மனைவி குமாரி (58) என்பவரை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஆட்டோ நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக ரங்கநாதன் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ரங்கநாதன், குமாரி ஆகியோர் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமாரி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story