ஆழ்வார்குறிச்சி அருகே பாலியல் தொல்லையால் 15 வயது சிறுமி தீக்குளிப்பு போக்சோ சட்டத்தில் ஆடு வியாபாரி கைது


ஆழ்வார்குறிச்சி அருகே பாலியல் தொல்லையால்  15 வயது சிறுமி தீக்குளிப்பு போக்சோ சட்டத்தில் ஆடு வியாபாரி கைது
x

ஆழ்வார்குறிச்சி அருகே, பாலியல் தொல்லையால் 15 வயது சிறுமி தீக்குளித்தாள். இதுதொடர்பாக ஆடு வியாபாரியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்

தென்காசி

ஆலங்குளம்:

ஆழ்வார்குறிச்சி அருகே, பாலியல் தொல்லையால் 15 வயது சிறுமி தீக்குளித்தாள். இதுதொடர்பாக ஆடு வியாபாரியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

ஆடு வியாபாரி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சொக்கநாதன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் (வயது 45). இவர் ஆடு வியாபாரம் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.

இவருக்கும், ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் வியாபாரம் தொடர்பாக நட்பு ஏற்பட்டது.

இதனால் ஜெயபால் ஆழ்வார்குறிச்சி பகுதிக்கு செல்லும்போது, தனது நண்பரின் 15 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

தீக்குளிப்பு

ஜெயபாலின் தொல்லையால் சம்பவத்தன்று அந்த சிறுமி தனது உடையில் தீ வைத்து தற்கொலைக்கு முயற்சி செய்தாள். உடனே அக்கம்பக்கத்தினர் அவளை மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஜெயபாலை கைது செய்தனர். பின்னர் அவரை ஆலங்குளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story