பெண்ணிடம் பணம், செல்போன் பறிப்பு


பெண்ணிடம் பணம், செல்போன் பறிப்பு
x
தினத்தந்தி 16 Jun 2023 8:00 PM GMT (Updated: 16 Jun 2023 8:01 PM GMT)

பெண்ணிடம் பணம், செல்போன் பறித்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் திருவள்ளுவர் நகர்சிவகாமி தெருவை சேர்ந்தவர் மதிவாணன் மனைவி ஷர்மிளா (வயது 56). இவர் திருநகருக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் கண் இமைக்கும் நேரத்தில் ஷர்மிளா வைத்து இருந்த கைப்பையை பறித்து சென்றனர். அந்த பையில் ரூ.40 ஆயிரம் மற்றும் ஒரு செல்போனும் இருந்தது. இது தொடர்பாக திருநகர் போலீசில் ஷர்மிளா புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மஆசாமிகளை தேடி வருகின்றனர்.


Next Story