காவிரி நதிநீர் பாதுகாப்பு விழிப்புணர்வு ரதம்; ஈரோட்டுக்கு வந்தது


காவிரி நதிநீர் பாதுகாப்பு விழிப்புணர்வு ரதம்;  ஈரோட்டுக்கு வந்தது
x

காவிரி நதிநீர் பாதுகாப்பு விழிப்புணர்வு ரதம் ஈரோட்டுக்கு வந்தது.

ஈரோடு

அகில பாரத சன்னியாசிகள் சங்கம், அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், காவிரி நதிநீர் பாதுகாப்பு விழிப்புணர்வு ரதம் நேற்று ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரைக்கு வந்தது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ரதத்தினை பக்தர்கள் விளக்கு ஏற்றி ஆரத்தி எடுத்து வணங்கினர். ரத யாத்திரையில் தலை காவிரியில் இருந்து கலசத்தில் புனித தீர்த்தம் எடுத்து செல்லப்பட்டது.

நதிகளை தூய்மையாக வைத்து கொள்ள வலியுறுத்தி, காவிரி கரையோர கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ரதம் சென்றது. இந்த ரத யாத்திரையில் 35 சன்னியாசிகள் பங்கேற்றனர். ரத யாத்திரையானது கடந்த 21-ந்தேதி கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் தலை காவிரியில் தொடங்கியது. வருகிற நவம்பர் மாதம் 13-ந்தேதி பூம்புகாரில் நிறைவு பெற்று, கலச நீரை கடலில் சங்கமிக்க உள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். ஈரோடு ரத யாத்திரை நிறைவு பெற்று, நாமக்கல் மாவட்டத்துக்கு புறப்பட்டு சென்றது.


Related Tags :
Next Story