சென்னை-திருப்பதி ரெயில் சேவை அக்.12 வரை ரத்து: தெற்கு ரெயில்வே அறிவிப்பு


சென்னை-திருப்பதி ரெயில் சேவை அக்.12 வரை ரத்து: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

தண்டவாள மேம்பாட்டுப் பணி காரணமாக சென்னை-திருப்பதி விரைவு ரெயில் சேவை ரத்து செய்யப்பட உள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

"சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு தினமும் விரைவு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் ரேனிகுண்டா பகுதியில் மேற்கொள்ளப்பட உள்ள தண்டவாள மேம்பாட்டுப் பணி காரணமாக 28-ந்தேதி முதல் அக்டோபர் 12-ந்தேதி வரை இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் விரைவு ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளது.

இதில் சென்னை சென்ட்ரலில் இருந்து தினமும் காலை 6.25 மணிக்கு புறப்படும் சப்தகிரி விரைவு ரெயில் (எண்.16057) பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் திருப்பதி விரைவு ரெயில் (எண்.16053) மற்றும் மாலை 4.35 மணிக்கு புறப்படும் கருடாத்திரி விரைவு ரெயில் (எண்.16203) 28-ந்தேதி முதல் அக்டோபர் 12-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இதுபோல மறுமார்க்கமாக திருப்பதியில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்படும் கருடாத்திரி விரைவு ரெயில் (எண்.16204), காலை 10.10 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் விரைவு ரெயில் (16054) மற்றும் மாலை 6.05 மணிக்கு புறப்படும் சப்தகிரி விரைவு ரெயில் (எண்.16058) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது." இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story