விழுப்புரத்தில் மாநில அளவிலான செஸ் போட்டி


விழுப்புரத்தில்    மாநில அளவிலான செஸ் போட்டி
x
தினத்தந்தி 19 Nov 2022 6:45 PM GMT (Updated: 19 Nov 2022 6:45 PM GMT)

விழுப்புரத்தில் மாநில அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது.

விழுப்புரம்


விழுப்புரத்தில் நேற்று மாநில அளவிலான செஸ் போட்டி தொடங்கியது. 8, 10, 12, 15 ஆகிய வயதுடைய பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தனித்தனி பிரிவாகவும் மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுப்பிரிவினருக்கு தனித்தனி பிரிவாகவும் போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டியில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சென்னை, காஞ்சீபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுப்பிரிவினர் என 250-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இப்போட்டியை விழுப்புரம் மாவட்ட செஸ் கழகத்தின் செயலாளர் நெடுஞ்செழியன் மேற்பார்வையில் ஸ்ரீமான் தலைமையிலான நடுவர்கள் குழு நடத்தினர்.

இப்போட்டியானது இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்ந்து நடக்கிறது. இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் 15 இடங்களை பிடிப்பவர்களுக்கும், பெண்கள் பிரிவில் முதல் 10 இடங்களை பிடிப்பவர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.


Next Story