செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா - எம்.எஸ். தோனி பங்கேற்பு


செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா - எம்.எஸ். தோனி பங்கேற்பு
x

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி பங்கேற்கிறார்.

சென்னை,

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு மைதானத்தில் கடந்த 28-ம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டன

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக 186 நாடுகளில் இருந்து தமிழகம் வருகை புரிந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

தொடக்க விழாவைப் போலவே, செஸ் ஒலிம்பியாட் நிறைவு நிகழ்ச்சியும் நேரு உள்விளையாட்டு மைதானத்தில் வருகிற 9-ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிறைவு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டு ஏற்பாடுகளை செய்து வருகின்றது.

இந்த நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு மைதானத்தில் வரும் 9-ம் தேதி நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி பங்கேற்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.


Next Story