அரியலூரில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களில் டாஸ்மாக் கடைகள் மூடல்


அரியலூரில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களில் டாஸ்மாக் கடைகள் மூடல்
x

அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் ஒரு கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், 5 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் நாளை (சனிக்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை வருகிற 12-ந்தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி அரியலூர் மாவட்டத்தில் மேலணிக்குழி, வி.கைகாட்டி, தேளூர், குவாகம், அழகாபுரம், ஸ்ரீபுரந்தான், கோடாலி ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கும், தா.பழூரில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளுக்கும் மற்றும் சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களுக்கும் நேற்று முன்தினம் முதல் நாளை வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளான 12-ந்தேதி அன்று ஆண்டிமடம், ராங்கியம் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கும், அரியலூரில் உள்ள 9 டாஸ்மாக் கடைகளுக்கும், கல்லாத்தூர், தா.பழூர் பகுதிகளில் தலா 2 டாஸ்மாக் கடைகளுக்கும், சில்லறை விற்பனைக்கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக் கூடம் அனைத்திற்கும் விடுமுறை விடப்படுவதாக அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story