ரூ.3½ லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்


ரூ.3½ லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
x

பரமத்திவேலூரில் ரூ.3½ லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.3 லட்சத்து 56 ஆயிரத்திற்கு தேங்காய் பருப்பு விற்பனை ஆனது. பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கடந்த வாரம் வியாழக்கிழமை 3 ஆயிரத்து 575 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.89.89-க்கும், குறைந்தபட்சமாக ரூ.41.89-க்கும், சராசரியாக ரூ.87.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்து 255-க்கு ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரத்து 792 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.91.70-க்கும், குறைந்த பட்சமாக ரூ.53.09-க்கும், சராசரியாக ரூ.77.09-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.3 லட்சத்து 56 ஆயிரத்து 351-க்கு விற்பனையானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story