ரூ.8 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்


ரூ.8 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
x

பரமத்திவேலூரில் ரூ.8 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. கடந்த வாரம் 7 ஆயிரத்து 234 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.88.30-க்கும், குறைந்தபட்சமாக ரூ.55.80-க்கும், சராசரியாக ரூ.82.90-க்கும் ஏலம் போனது.

மொத்தம் ரூ.5 லட்சத்து 60 ஆயிரத்து 698-க்கு ஏலம் போனது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்திற்கு 10 ஆயிரத்து 457 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.82.89-க்கும், குறைந்தபட்சமாக ரூ.55.10-க்கும், சராசரியாக ரூ.78.60-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.7 லட்சத்து 99 ஆயிரத்து 450-க்கு ஏலம் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story