மின்னணு வாக்குப்பதிவு எந்திர வைப்பறையை கலெக்டர் ஆய்வு


மின்னணு வாக்குப்பதிவு எந்திர வைப்பறையை கலெக்டர் ஆய்வு
x

மின்னணு வாக்குப்பதிவு எந்திர வைப்பறையை கலெக்டர் ஆய்வு செய்தார்.

அரியலூர்

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி மற்றும் வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகள் உள்ளிட்டவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த அறையை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா நேற்று காலாண்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், மின்னணு வாக்குப்பதிவு எந்திர வைப்பறை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் பாதுகாப்புடன் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவதையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, தேர்தல் தாசில்தார் வேல்முருகன் மற்றும் அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story