1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

ரேஷன் அரிசி கடத்தியதாக குடோன் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

ஓமலூர்:-

ஓமலூரை அடுத்த செம்மாண்டப்பட்டி பாலக்காடு பகுதியில் உள்ள குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கார்த்திக் பிரகாஷ் என்பவரின் குடோனில் சோதனை நடத்தினர். இதில் 50 கிலோ எடை கொண்ட 31 மூட்டைகளில் சுமார் 1½ டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குடோன் உரிமையாளரிடம் நடத்திய விசாரணையில், அவர் பொது மக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வெளி மாநிலங்களில் அதிக விலைக்கு விற்பது தெரிய வந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், குடோன் உரிமையாளரான கார்த்திக் பிரகாஷை கைது செய்தனர்.


Next Story