நிலத்தகராறில் இருதரப்பினர் மோதல்: 7 பேர் மீது வழக்கு


நிலத்தகராறில் இருதரப்பினர் மோதல்: 7 பேர் மீது வழக்கு
x

மத்தூர் அருகே நிலத்தகராறில் இருதரப்பினர் மோதிகொண்டது தொடர்பாக போலீசார் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி

மத்தூர்:

மத்தூர் அருகே உள்ள ஒபுலிகாட்டூரை சேர்ந்தவர் சக்தி (வயது 36). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (47). உறவினர்கள். இவர்களுக்குள் நிலத்தகராறு இருந்து வருகிறது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் மோதி கொண்டனர். இது தொடர்பாக இருதரப்பினரும் மத்தூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் சக்திவேல், திருப்பதி (36), மணிமேகலை (35), ஆஷா (31), சக்தி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story