இருதரப்பினர் மோதல்; 5 பேர் மீது வழக்கு


இருதரப்பினர் மோதல்; 5 பேர் மீது வழக்கு
x

இருதரப்பினர் மோதிக்கொண்டனர். இது தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

ராயக்கோட்டை ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சங்கர் (வயது 29). இவரும் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கூக்குட்டை கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (32) என்பவரும் ராயக்கோட்டை பகுதியில் அருகருகே கடை வைத்துள்ளனர். சம்பவத்தன்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் இரும்பு கம்பியால் சக்திவேல் மற்றும் அவருடைய மனைவி லாவண்யா ஆகியோர் சங்கரை தாக்கினர். இதில் காயமடைந்த சங்கர், பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக ராயக்கோட்டை போலீசில் சங்கர் புகார் செய்தார். இதையடுத்து சக்திவேல் மற்றும் அவருடைய மனைவி லாவண்யா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல் சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் சங்கர் (29), குமரன் (31), ரகமத் காலனியை சேர்ந்த ஜாபர் (29) ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story