மாடு கட்டுவது தொடர்பாக மோதல்; 2 பேர் மீது வழக்கு

மாடு கட்டுவது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வானத்திரையான்பட்டிணம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 55), விவசாயி. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் கொளஞ்சிநாதன் (52) என்பவருக்கும் இடையே மாடு கட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் கட்டையால் தாக்கி கொண்டனர். பின்னர் அவர்கள் 2 பேரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





