மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

தேனியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தேனி பழைய பஸ் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. எல்.ஐ.சி. நிறுவனம் முதலீடு செய்த அதானி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்தாத மத்திய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். நகர தலைவர் கோபிநாத் முன்னிலை வகித்தார்.

இதில் மாவட்ட செயலாளர் சையதுஅலி அப்தாகிர், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர் சின்னபாண்டி, மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி கிருஷ்ணவேணி, பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி மற்றும் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.


Related Tags :
Next Story