ராகுல்காந்திக்கு எதிரான தீர்ப்பை கண்டித்துகள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரசார் ஆா்ப்பாட்டம்


ராகுல்காந்திக்கு எதிரான தீர்ப்பை கண்டித்துகள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரசார் ஆா்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 March 2023 6:45 PM GMT (Updated: 23 March 2023 6:45 PM GMT)

ராகுல்காந்திக்கு எதிரான தீர்ப்பை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரசார் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி எம்.பி.க்கு எதிரான தீர்ப்பை கண்டித்தும், பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படும் மத்திய அரசை கண்டித்தும் நேற்று நாடு முழுவதும்காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம், மறியல் போன்ற பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அந்த வகையில் கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்டத் தலைவர் தனபால், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வக்கீல் இளையராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வீரமுத்து, இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் மணிரத்தினம் கலந்து கொண்டு ராகுல் காந்திக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பை கண்டித்தும், பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்படும் மத்திய அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார்.

இதில் நகராட்சி கவுன்சிலர் தேவராஜ், இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் மாதேஸ்வரன், பொருளாளர் ஆறுமுகம், நகர தலைவர் குமார், மாவட்டத் துணைத் தலைவர் செல்வராஜ், வட்டார தலைவர்கள் சரண்ராஜ், தனபால் கொளஞ்சியப்பன், சின்னசேலம் நகர தலைவர் ஏழுமலை, மகிளா காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் பவுனாம்பாள், நிர்வாகி ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story