தமிழகத்தில் 195 பேருக்கு கொரோனா: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரத்தில் வேகமாக பரவுகிறது


தமிழகத்தில் 195 பேருக்கு கொரோனா: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரத்தில் வேகமாக பரவுகிறது
x

தமிழகத்தில் 195 பேருக்கு கொரோனா: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரத்தில் வேகமாக பரவுகிறது.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 106 ஆண்கள், 89 பெண்கள் என மொத்தம் 195 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 95 பேர், காஞ்சீபுரத்தில் 30 பேர், செங்கல்பட்டில் 23 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த 3 மாவட்டங்களில் கொரோனா வேகமாக பரவுகிறது. தமிழகத்தில் 17 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. 21 மாவட்டங்களில் யாரும் புதிதாக பாதிக்கப்படவில்லை.

மேலும், 12 வயதுக்குட்பட்ட 11 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 38 முதியவர்களுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அரியலூர், திண்டுக்கல் உள்பட 8 மாவட்டங்கள் மட்டும் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகி உள்ளன. இந்த மாவட்டங்களில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பும் இல்லை, சிகிச்சையிலும் ஒருவர் கூட இல்லை.

தமிழகத்தில் நேற்றையை நிலவரப்படி 101 பேர் மட்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 83-வது நாளாக எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. தற்போது தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 525 பேரும், செங்கல்பட்டில் 248 பேரும் உள்பட 1,021 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story