982 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்


982 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
x

வேலூர் மாவட்டத்தில் 982 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை மறுநாள் நடக்கிறது

வேலூர்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தவும், தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் தடுப்பூசி போடுவதற்கு தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில் மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

அதன்படி தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் பஸ்நிலையங்கள், உழவர்சந்தைகள், பஜார், ஆட்டோநிறுத்தம், பள்ளிகள் என்று மொத்தம் 982 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து பொதுமக்களிடையே அந்தந்த உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். மேலும் 2-வது மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களின் செல்போன் எண்ணிற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் குறுந்தகவல் அனுப்பப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி போடும் பணியில் 700-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளார் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story