குடும்பத்துடன் குளிக்க சென்ற போது ஆற்றில் மூழ்கி கூரியர் நிறுவன ஊழியர் பலி


குடும்பத்துடன் குளிக்க சென்ற போது ஆற்றில் மூழ்கி கூரியர் நிறுவன ஊழியர் பலி
x

கடியபட்டணம் வள்ளியாற்றில் குடும்பத்துடன் குளிக்க சென்ற கூரியர் நிறுவன ஊழியர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கன்னியாகுமரி,

சென்னை, மேற்கு மாம்பலம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 48). இவரது மனைவி அனந்த செல்வி இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இவர் சென்னையில் ஒரு கூரியர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த இரு தினங்களுக்கு முன் இவர் குடும்பத்துடன் குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே சேரமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார்.

நேற்று அவர் குடும்பத்துடன் கடியபட்டணம் வள்ளியாற்றில் குளிப்பதற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென குளித்து கொண்டிருந்த கோபாலகிருஷ்ணன் மூச்சு திணறி நீரில் மூழ்கினார். உடனே அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது மனைவி அனந்த செல்வி மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story