இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்க கோர்ட்டு உத்தரவு


இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்க கோர்ட்டு உத்தரவு
x

இதனையடுத்து படகுகளை மீண்டும் தமிழகம் கொண்டு வர மீனவர்கள் இலங்கை செல்ல உள்ளனர்.

காரைக்கால்,

நாகையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி, கடந்த ஆண்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அப்போது, மீனவர்களை விடுவித்த அந்நாட்டு நீதிமன்றம், விசைப்படகுகளை விடுவிக்கவில்லை. இது குறித்த வழக்கு திரிகோணமலை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது, விசைப்படகுகளை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து படகுகளை மீண்டும் தமிழகம் கொண்டு வர மீனவர்கள் இலங்கை செல்ல உள்ளனர்.


Next Story