பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி


பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி
x
தினத்தந்தி 14 Jan 2023 6:45 PM GMT (Updated: 14 Jan 2023 6:46 PM GMT)

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி நடந்தது.

திருவாரூர்

கோட்டூர்:

திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் மாணவிகள் உழவார பணியில் ஈடுபட்டனர்.நிகழ்ச்சிக்கு கோவில் அலுவலர் முருகையன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் விமலா முன்னிலை வகித்தார். நகரமன்ற தலைவர் கவிதா பாண்டியன் முகாமை தொடங்கி வைத்து மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். இதில் ஆசிரியர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story