கொடிவேரி அணையில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு; நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம்


கொடிவேரி அணையில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு; நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம்
x

கொடிவேரி அணையில் நண்பர்களுடன் குளித்தபோது நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் இறந்தார்.

ஈரோடு

டி.என்.பாளையம்

கொடிவேரி அணையில் நண்பர்களுடன் குளித்தபோது நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் இறந்தார்.

கல்லூரி மாணவர்

திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மகன் ரமேஷ் (வயது 21). இவர் அவினாசியில் உள்ள அரசு கலை கல்லூரியில் படித்து வந்தார்.

நேற்று விடுமுறை என்பதால் ரமேஷ் தன்னுடைய நண்பர்கள் 3 பேருடன் ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு மோட்டார்சைக்கிளில் வந்து உள்ளார். பின்னர் அவர்கள் 4 பேரும் கொடிவேரி அணையில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர்.

சாவு

அப்போது ரமேஷ் ஆழமான பகுதிக்கு சென்று உள்ளார். இதில் அவர் நீரில் மூழ்க தொடங்கினார். இதை கண்டதும், ரமேசை அவருடைய நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனால் தண்ணீரில் மூழ்கி ரமேஷ் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கோபி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அணையில் மூழ்கி இறந்த ரமேசை மீட்டனர். மேலும் பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story