மதுரை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காது கேளாதோர் போராட்டம்
மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே காதுகேளாதோர் கையில் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை:
மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு 10 மணி முதல் காதுகேளாத மாற்றுத்திறனாளிகள் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தங்களுக்கு மாதாந்திர உதவித் தொகையை 3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு தொகுப்பு வீடு வழங்க வேண்டும், அரசு மற்றும் தனியார் வேலைகளில் இடஒதுக்கீட்டின் கீழ் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story