ராயக்கோட்டை அருகேகார்கள் நேருக்கு நேர் மோதி 2 பேர் சாவு5 பேர் படுகாயம்


ராயக்கோட்டை அருகேகார்கள் நேருக்கு நேர் மோதி 2 பேர் சாவு5 பேர் படுகாயம்
x
கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை

ராயக்கோட்டை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

கார்கள் மோதல்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் முனியப்பா (வயது 40). இவர் நேற்று முன்தினம் இரவு பாலக்கோட்டில் இருந்து ராயக்கோட்டை நோக்கி காரில் வந்தார். அதே போல ராயக்கோட்டை அருகே உள்ள கூத்தனப்பள்ளி பகுதியில் இருந்து மற்றொரு கார் நல்லராலப்பள்ளி வழியாக ராயக்கோட்டை நோக்கி வந்து கொண்டு இருந்தது.

இந்த காரை கூத்தனப்பள்ளியை சேர்ந்த பாப்பையா மகன் ராமமூர்த்தி (23) என்பவர் ஓட்டி வந்தார். காரில் அதே ஊரை சேர்ந்த பசப்பா மகன் கார்த்திக் (24), ரத்தினப்பா மகன் பதின்குமார் (24), உள்ளுகுறுக்கையை சேர்ந்த ரமேஷ் மகன் சுமேஷ் (24), நாராயணன் மகன் ரமேஷ் (24), கொர்லப்பா மகன் சத்யமூர்த்தி (24) ஆகிய 5 பேர் இருந்தனர். இந்த கார் ராயக்கோட்டை அருகே உள்ள அளேசீபம் பாளேபுரம் நான்கு வழி சாலையில் வந்தபோது ராமமூர்த்தி ஓட்டி சென்ற காரும், முனியப்பா ஓட்டி வந்த காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

2 பேர் சாவு

இந்த விபத்தில் டிரைவர் ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் கார்த்திக், சுமேஷ், ரமேஷ், சத்யமூர்த்தி, பதின்குமார், முனியப்பா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே கார்த்திக் பரிதாபமாக இறந்தார்.

இவர்களில் சுமேஷ், ரமேஷ், சத்யமூர்த்தி, பதின்குமார் ஆகிய 4 பேரும் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியிலும், முனியப்பா பெங்களூரு தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் உத்தனப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான கார்களை அப்புறப்படுத்தினர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story