கிருஷ்ணகிரியில்மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டிட தொழிலாளி சாவு


கிருஷ்ணகிரியில்மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டிட தொழிலாளி சாவு
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா பாறையூர் பக்கமுள்ள முனுசாமி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 34). கட்டிட தொழிலாளி. இவர் கிருஷ்ணகிரி தண்டேகுப்பம் டைட்டான் நகர் பகுதியில் தங்கி வேலை செய்து வந்தார் கடந்த 11-ந் தேதி அவர் பணியில் ஈடுபட்டபோது கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த ராஜ்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story