சாலையை கடக்க முயன்ற போதுமோட்டார் சைக்கிள் மோதி பெண் சாவு


சாலையை கடக்க முயன்ற போதுமோட்டார் சைக்கிள் மோதி பெண் சாவு
x

பர்கூர் அருகே சாலையை கடக்க முயன்ற போது மோட்டார் சைக்கிள் மோதி பெண் இறந்தார்.

கிருஷ்ணகிரி

பர்கூர்

பர்கூர் அருகே உள்ள அங்கிநாயனப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி மாரி (வயது 53). சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை நடந்து சென்று கடக்க முயன்றார். அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் மாரி மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பர்கூர் போலீசார் விரைந்து வந்து மாரியின் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story