மதுக்கடை அருகே முதியவர் பிணம்


மதுக்கடை அருகே முதியவர் பிணம்
x

மதுக்கடை அருகே முதியவர் பிணமாக கிடந்தார்.

சிவகங்கை

இளையான்குடி,

இளையான்குடி புறவழிச்சாலையில் உள்ள அரசு மதுக்கடை அருகே 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த இளையான்குடி போலீசார் அங்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் அவர் இளையான்குடி அப்பர் தெருவை சேர்ந்த மணி (வயது 65) என தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார் என்பது தொடர்பாக சப்- இன்ஸ்பெக்டர் செழியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.



Next Story