கூட்டுறவு வங்கி பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல்
தேனி அருகே கூட்டுறவு வங்கி பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த மருமகன் உள்பட 4 பேர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி அருகே கெப்புரெங்கன்பட்டியை சேர்ந்த சுருளிமுத்து மனைவி பத்மாவதி (வயது 49). இவர் பெரியகுளம் கூட்டுறவு வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். அவருடைய மகள் நிவேதாவுக்கும், அதே ஊரைச் சேர்ந்த துரைராஜ் மகன் விக்னேஷ்வரனுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. கருத்துவேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து வாழ்கின்றனர். இதுதொடர்பாக தேனி குடும்ப நல கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், அந்த வழக்கை வாபஸ் பெறக்கோரி, பத்மாவதியை விக்னேஷ்வரன், அவருடைய தந்தை துரைராஜ், தாயார் வசந்தா, தம்பி ஹரிஹரன் ஆகியோர் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் பத்மாவதி புகார் செய்தார். அதன்பேரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த விக்னேஷ்வரன் உள்பட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.