பழ வியாபாரிக்கு கொலை மிரட்டல்


பழ வியாபாரிக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 12 Dec 2022 7:00 PM GMT (Updated: 12 Dec 2022 7:00 PM GMT)

கம்பத்தில் பழ வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி

கம்பத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 43). பழ வியாபாரி. இவருக்கும், பழம் விற்பனை செய்யும் சுருளிப்பட்டி காந்திஜி தெருவை சேர்ந்த சுரேஷ் (46) என்பவருக்கும் இடையே வியாபாரம் சம்பந்தமாக பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 8-ந்தேதி சுரேஷ், அவரது மகன் வசந்த் உடன் பாஸ்கரன் கடைக்கு சென்று கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் பாஸ்கரன் புகார் கொடுத்தார். அதன் பேரில் சுரேஷ் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story