முதியவருக்கு கொலை மிரட்டல்


முதியவருக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 28 July 2023 6:45 PM GMT (Updated: 28 July 2023 6:46 PM GMT)

போடியில் முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி

போடி பெரியாண்டவர் நெடுஞ்சாலையை சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 65). இவருக்கு போடிமெட்டு பகுதியில் காபி தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் விசுவாசபுரத்தை சேர்ந்த ராமசந்திரன் (35) என்பவர் திடீரென நுழைந்தார். பின்னர் அவர் அங்கு பயிரிட்டிருந்த காபி செடிகளை வெட்டி அழித்தார். அதை தட்டி கேட்ட ஜெயசீலனை அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து குரங்கணி போலீசில் ஜெயசீலன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story