பெண்ணுக்கு கொலை மிரட்டல்:ராணுவ வீரர் உள்பட 2 பேர் மீது வழக்கு


பெண்ணுக்கு கொலை மிரட்டல்:ராணுவ வீரர் உள்பட 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 16 July 2023 6:45 PM GMT (Updated: 16 July 2023 6:45 PM GMT)

தேனியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த ராணுவ வீரர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி

தேனி பவர் ஹவுஸ் ஓடை தெருவை சேர்ந்தவர் ஜெயேந்திரன் (வயது 53). முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மனைவி ஜெயசுதா (40). இவர், தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், எங்களுக்கு குழந்தை இல்லாததால் ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறோம் இந்நிலையில் ஜெயேந்திரன் அரண்மனைப்புதூரை சேர்ந்த சசிகலா என்பவரோடு சேர்ந்து கொண்டு எனது பெயரில் இருக்கும் சொத்துகளை தனது பெயருக்கு எழுதிக் கொடுக்குமாறு கொடுமைப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் ஜெயேந்திரன், சசிகலா ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story