கிருஷ்ணகிரியில் சரக்கு ரெயில் பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு - ரெயில் சேவை பாதிப்பு


கிருஷ்ணகிரியில் சரக்கு ரெயில் பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு - ரெயில் சேவை பாதிப்பு
x

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே சரக்கு ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.

கிருஷ்ணகிரி,

தூத்துக்குடியில் இருந்து புறப்பட்ட சரக்கு ரெயில் உர மூட்டைகளுடன் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. தர்மபுரி வழியாக சென்று கொண்டிருந்த சரக்கு ரெயில் அதிகாலை 3 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே வந்த போது, அதன் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் ரெயில் பெட்டிகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே சேலம்-யஷ்வந்த்பூர், தர்மபுரி-பெங்களூரு, பெங்களூரு-ஜோலார்பேட்டை ஆகிய வழித்தடங்களில் 4 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு, சில ரெயில்கள் சில ரெயில்கள் தர்மபுரி-ஓசூர் வழித்தடத்திற்கு பதிலாக ஜோலார்பேட்டை-திருப்பத்தூர்-சேலம் வழியாக திருப்பி விடப்பட்டது.




Next Story