6,600 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


6,600 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x

கல்வராயன்மலையில் 6,600 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கல்வராயன்மலையில் உள்ள எழுத்தூர் கிராம வனப்பகுதியில் சாராயம் காய்ச்சி சேலம் மாவட்டத்திற்கு கடத்தி செல்லப்படுவதாக கரியாலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கரியலூர் சப்-இன்ஸ்பெக்டர் சேகர், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் ஆகியோர் தலைமையிலான போலீசார் எழுத்தூர் வனப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் 6,600 லிட்டர் சாராய ஊறல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அங்கேயே கீழே கொட்டி அழித்தனர்.


Next Story