திருப்புல்லாணி யூனியனில் வளர்ச்சி திட்டப்பணிகள்


திருப்புல்லாணி யூனியனில் வளர்ச்சி திட்டப்பணிகள்
x

திருப்புல்லாணி யூனியனில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

ராமநாதபுரம்

ராமநாதபுரம், மார்ச்.22-

திருப்புல்லாணி யூனியனில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வளர்ச்்சி திட்ட பணிகள்

ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி யூனியன் தினைக்குளம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ.53.85 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் திடீர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் தினைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8.30 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டும் பணி மற்றும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.10.55 லட்சத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டப்பட்ட காம்பவுண்டு சுவர் மற்றும் சுவரில் வரையப்பட்டுள்ள விழிப்புணர்வு ஓவியங்களை பார்வையிட்டார்.

மழைநீர் வடிகால்

தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடி கல்வித்திறன் குறித்து கேட்டறிந்தார். தினைக்குளத்தில் 15-வது நிதி குழு திட்டத்தில் ரூ.30 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணியை பார்வையிட்டார். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தினைக்குளம் கிராம சாலையின் பக்கவாட்டுகளில் ரூ.5 லட்சத்தில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் வாய்க்கால் சீரமைக்கும் பணியை பார்வையிட்டார். அனைத்து பணிகளையும் விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், கணேஷ் பாபு, ஒன்றிய பொறியாளர்கள் அருண் பிரசாத், ராமசாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story