குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்


குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்
x
தினத்தந்தி 17 Aug 2023 6:45 PM GMT (Updated: 17 Aug 2023 6:45 PM GMT)

வாசுதேவமங்கலம் கிராமத்தில் பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடந்தது.

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் ஒன்றியம் நகர் ஊராட்சி வாசுதேவமங்கலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை மூலம் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க நோய் மாத்திரை வழங்கும் முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் ராணி முத்துலெட்சுமி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், நமச்சிவாயம், ஒன்றியக்குழு உறுப்பினர் நதியா, ஊராட்சி தலைவர் மோகனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழுத்தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன், குடற்புழு நீக்க மாத்திரைகளை மாணவர்களுக்கு வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். அனைவரும் குடற்புழு நீக்க உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகர், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story