தி.மு.க. அரசை கண்டித்து, அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்


தி.மு.க. அரசை கண்டித்து, அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
x

ஆலங்காயத்தில் தி.மு.க. அரசை கண்டித்து, அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

ஆலங்காயம் கிழக்கு ஒன்றியம் மற்றும் ஆலங்காயம் பேரூராட்சி அ.தி.மு.க. சார்பில் ஆலங்காயத்தில் தி.மு.க. அரசை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான கோவி.சம்பத்குமார், பேரூராட்சி செயலாளர் சிவக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்ட செயலாளருமான கே.சி. வீரமணி, வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ. கோ.செந்தில்குமார் ஆகியோர் தொடக்கி வைத்து பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வை கண்டித்தும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது குறித்தும், பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

மாவட்ட துணை செயலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன், வாணியம்பாடி நகர செயலாளர் சதாசிவம் உள்பட மாவட்ட, நகர ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story