கிழக்கு மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா


கிழக்கு மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா
x

கிழக்கு மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா

நாகப்பட்டினம்

வாய்மே:

வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் கிழக்கு பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், வீதிஉலாவும் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு சாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், தேன் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சாமி யானை வாகனத்தில் வீதிஉலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மஞ்சள் விளையாட்டு விழா வருகிற 31-ந் தேதி நடைபெறுகிறது.


Next Story