நாமக்கல் மண்டலத்தில் ஒரே மாதத்தில்முட்டை விலை ஒரு ரூபாய் உயர்வு


நாமக்கல் மண்டலத்தில் ஒரே மாதத்தில்முட்டை விலை ஒரு ரூபாய் உயர்வு
x
நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 500 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 505 காசுகளாக உயர்ந்து உள்ளது.

முட்டைக்கோழி கிலோ ரூ.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில், அதன் விலையை கிலோவுக்கு ரூ.11 உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.107 ஆக அதிகரித்து உள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.127-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

கடந்த மாதம் 1-ந் தேதி முட்டை கொள்முதல் விலை 405 காசுகளாக இருந்தது. ஒரே மாதத்தில் ரூ.1 அதிகரித்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். முட்டையின் தேவை அதிகரித்து உள்ள நிலையில், கோடை வெயிலால் முட்டை உற்பத்தி 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை குறைந்து இருப்பதே கொள்முதல் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.


Next Story