முதியவர் தற்கொலை


முதியவர் தற்கொலை
x

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தேனி

போடி அருகே உள்ள மேலச்சொக்கநாதபுரம் வினோபாஜி காலனியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 85). இவருக்கு கடந்த 10 ஆண்டுகளாக தலையில் பலத்த வலி இருந்தது. இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் வலி குறையவில்லை. இதனால் மனம் உடைந்த அவர் நேற்று இரவு வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story