முதியவர் தற்கொலை


முதியவர் தற்கொலை
x

தேன்கனிக்கோட்டை அருகே முதியவர் தற்கொலை தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தளியை அடுத்த குடிமியான்தொட்டியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 60). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றார். அப்படி இருந்தும் உடல்நிலை சரியாகவில்லையாம். இதில் மனம் உடைந்த நாகராஜ் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் நாகராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story