விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை


விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை
x

சேத்தியாத்தோப்பு அருகே கணவர் இறந்த சோகத்தில் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்

சேத்தியாத்தோப்பு,

சேத்தியாத்தோப்பு அருகே எறும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 80). இவரது மனைவி அஞ்சாயால் (70). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். நடராஜனின் மகன்கள் மற்றும் மகள்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி நடராஜன் வயது முதிர்வு காரணமாக இறந்தார். கணவர் இறந்ததால் அஞ்சாயால் பெரும் சோகத்துடன் காணப்பட்டார். சம்பவத்தன்று மனமுடைந்த அஞ்சாயால் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்துவிட்டார்.

சிகிச்சை பலனின்றி சாவு

இதில் மயங்கி விழுந்த அவர் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அஞ்சாயால் நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் இறந்த சோகத்தில் மனைவி விஷம் குடித்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story