விஷம் குடித்து எலக்ட்ரீசியன் தற்கொலை


விஷம் குடித்து எலக்ட்ரீசியன் தற்கொலை
x

விஷம் குடித்து எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர்

விஷம் குடித்து எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்டார்.

கீழ்பென்னாத்தூரை அடுத்த சி.சாலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. விவசாயி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 29). எலக்ட்ரீசியன். நோயினால் அவதிப்பட்டு வந்த இவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணம் ஆகவில்லை என விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஷத்தை குடித்து விட்டார். மயங்கி விழுந்த அவரை திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில், கீழ்பென்னாத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story