மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி


மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி
x

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலியானார்.

வேலூர்

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 56). எலக்ட்ரீசியன். இவர் சில நாட்களுக்கு முன்பு சத்துவாச்சாரியில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு வந்தார். அங்கு அவர் மின் பராமரிப்பு பணி மேற்கொண்டதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மூர்த்தி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் காயமடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story