வெவ்வேறு விபத்துகளில் மின்வாரிய ஊழியர்-பள்ளி மாணவி பலி


வெவ்வேறு விபத்துகளில் மின்வாரிய ஊழியர்-பள்ளி மாணவி பலி
x

வெவ்வேறு விபத்துகளில் மின்வாரிய ஊழியர்-பள்ளி மாணவி ஆகிய 2 பேர் பலியானார்கள்.

திருச்சி

முசிறி, ஆக.25-

வெவ்வேறு விபத்துகளில் மின்வாரிய ஊழியர்-பள்ளி மாணவி ஆகிய 2 பேர் பலியானார்கள்.

மின்வாரிய ஊழியர்

முசிறி- துறையூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 55). மின்வாரிய ஊழியரான இவர் முசிறி- துறையூர் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிரே பிரதீப், சஞ்சய் ஆகியோர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பரமசிவம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பரமசிவம் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த பிரதீப், சஞ்சய் ஆகியோர் சிகிச்சைக்காக முசிறி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி பலி

சோமரசம்பேட்டை அருகே உள்ள முதலைப்பட்டி காவல் நகரை சேர்ந்தவர் வாணன். இவரது மகள் நிகிதா (12). இவர் சோமரசம்பட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று இவர் பள்ளி முடிந்து வீட்டுக்கு பஸ்சில் வந்தார். பின்னர் அவர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி எட்டரை -வியாழன் மேடு சாலையை கடக்க முயன்றார்.

அப்போது, இனம்புலியூர் கீழத்தெருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (22) என்பவர் ஓட்டி வந்த மொபட் மாணவி நிகிதா மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குழுமணி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story