மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

வாணியம்பாடியில் மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், மின்வாரிய பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள், மின்சார வாரியத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், மத்திய அரசின் மின் சட்டம் 2022-ஐ கண்டித்தும் வேலையை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தகைய செயலால் இலவச மின்சாரம் பறிபோகும்,, விலைவாசி உயரும். எனவே மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story