கிரேன் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி


கிரேன் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
x

கிரேன் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

திருச்சி

மணப்பாறையை அடுத்த ஆவிக்காரப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 46). இவர் மணப்பாறையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

வட்டாவி கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கிரேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சுப்ரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story