வேலைவாய்ப்பு முகாமில் 77 பேருக்கு பணி நியமன ஆணை


வேலைவாய்ப்பு முகாமில் 77 பேருக்கு பணி நியமன ஆணை
x

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு முகாமில் 77 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் பாலமுருகன் தொடங்கி வைத்தார். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்ற இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட பணிநாடுனர்களும், 18 தனியார் துறை நிறுவனங்களும் கலந்துகொண்டனர். வேலையளிக்கும் நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான 77 பணிநாடுனர்களை தேர்வு செய்தனர். உடனடியாக அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.


Next Story