ஈரோடு தனியார் மருத்துவமனையில்வருமான வரித்துறையினர் திடீர் சோதனை


ஈரோடு தனியார் மருத்துவமனையில்வருமான வரித்துறையினர் திடீர் சோதனை
x

ஈரோடு தனியார் மருத்துவமனையில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடைபெற்றது

ஈரோடு

ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதற்காக நேற்று மதியம் சென்றனர். 4 கார்களில் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மருத்துவமனைக்குள் திடீரென நுழைந்து சோதனையை தொடங்கினர். அப்போது வழக்கம்போல் நோயாளிகள் சிகிச்சைக்காக வரவேற்பு அறையில் காத்திருந்தனர். அதனால் மருத்துவ சிகிச்சைக்கு இடையூறு ஏற்படுத்தாமல் அதிகாரிகள் தங்களது சோதனைகளை நடத்தினர். மருத்துவமனையில் தலைவர், நிர்வாக இயக்குனர் ஆகியோர் அறைகளிலும், நிர்வாக அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனையிட்டனர். அங்குள்ள கோப்புகளை பார்வையிட்ட அதிகாரிகள் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வரிஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். இந்த சோதனை இரவு வரை தொடர்ந்து நடந்தது.

தனியார் மருத்துவமனையில் வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கருமுட்டை விற்பனை வழக்கில் இந்த தனியார் மருத்துவமனையின் கருத்தரித்தல் மைய ஆய்வகத்துக்கு சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோர்ட்டு உத்தரவின்பேரில் இந்த சீல் அகற்றப்பட்டு ஆய்வகம் தற்போது செயல்பட்டு வருகிறது.


Next Story